
மக்களின் நம்பிக்கையை இழந்த நீதித்துறை இந்நாட்டில் உருவாகியுள்ளது: யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா இந்நாட்டிலிருந்து வெளியேறிய என்னும் செய்தியானது நீதித்துறையின் நம்பகத்தன்மை குறித்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளினை ஏற்படுத்தியுள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று(29.09.2023) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சட்டமா அதிபரின் அழுத்தம் குருந்தூர் மலை வழக்கில் உண்மையினை நிலைநாட்டுவதற்காக நடுநிலையுடனும் நீதியுடனும் வழக்கினை விசாரித்து வந்த நீதிபதி சரவணராஜா தனது உயிருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்…