thamil.desam@gmail.com

பிராம்டனில் அமைந்துள்ள நினைவுத்தூபியை சேதமாக்கிய இலங்கை கைக்கூலிகள்!

May 27.2025 – கனடா. பிராம்டனில் அமைந்துள்ள நினைவுத்தூபியை சேதமாக்கிய இலங்கை கைக்கூலிகள்! இலங்கை அரசின் இனப்படுகொலைகளை அம்பலப்படுத்தும் நினைவுச் சின்னமான பிராம்டன் நினைவுத்தூபியை சிதைக்கும் இனவெறி நோக்கோடு 26.05.2025 அதிகாலை 2-3 மணியளவில் இரு முகமூடி அணிந்த, கறுப்பு உடைகள் தரித்த சிறிலங்கா அரச புலனாய்வின் கைக்கூலிகளினால் தூபி மீதான வன்மம் நிறைந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதை தமிழினமாக  வன்மையாக கண்டிப்போம்! CTC இன் அலுவலகம், தமிழ்வண் வானொலிக்கு சொந்தமான ஒலிபரப்பு செய்யும் வாகனம் ஆகியவற்றை…

Read More

கனடா பாராளுமன்றத்தினுள் தமிழர் தாயகத்தை பூர்வீகமாக கொண்ட பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஜெனிதா நாதன்.

  சசி -22.05.2025 ஜெனிதா நாதன் கடந்த நான்கு வருடங்களாக மார்க்கம் மாநகர சபையில் உள்ள, ஒரு பகுதி (வாட் கவுன்சிலர்) நகர சபை உறுப்பினராக இருந்ததுடன் தாயகம் நோக்கிய பல செயற்பாடுகளிலும் மிகவும் சிறப்பாக பணி செய்ததுடன், கனடாவில் இருக்கும் கனடிய தமிழ் காங்கிரஸ், கனடிய தமிழர் தேசிய பேரவை, அரசியல் துறை மற்றும் பல அமைப்புக்களுடன் மிக நெருக்கமாக தொடர்பிலிருந்து, தாயகத்தை நோக்கிய தேசிய செயற்பாட்டில் செயலாற்றி இருந்தார். அதுமட்டுமின்றி தமிழர் தாயகத்தை நோக்கி…

Read More

அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் வெளியிட்ட தமிழின அழிப்பின் நினைவு நாள் மே 18 அறிக்கை!

நிமால் – 18.05.2025 அனைத்துலக தமிழர் பேரவையின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் வெளியிட்ட தமிழின அழிப்பின் நினைவு நாள் மே 18 அறிக்கையில், கனடாவை உலக நாடுகள் பின்பற்ற வேண்டுமென கேட்டுள்ளார்.  

Read More

இந்தியப் புலனாய்வாளர்களின் கைகளில் தம்பி சாள்ஸ்சின் வரலாறு!!!

  ஜெர்மன் நாட்டில் தமிழ்நெட் ஜெயாவின் வழிநடத்தலில் நேசக்கரம் சாந்தி, துளசிச்செல்வனின் எழுத்தாற்றலும் இணைந்து பிரபாகரன் சாள்ஸ் என்னும் புத்தக வெளியீட்டினை ஜேர்மனியில் செய்து இருந்தார்கள். இப்புத்தகமும் ஏற்கனவே, சாள்சுடன் பயணித்த முன்னாள் பத்துப் போராளிகள் தந்த செய்திகளை ஆதாரமாக வைத்து இப்புத்தகம் எழுதியதாக இந்தியாவுக்கு செம்படிக்கும் கூட்டம் இந்திய “தடம்” யூரிப் தளத்தில் கூறினார்கள். அந்த தடம் செய்தி தளத்தில் வரும் செய்தி பற்றி நீங்கள் ஆய்வு செய்யுங்கள். முன்னர் புத்தகங்களில் வந்தது போல் இப்…

Read More

தாயகத்தில் பல கோமாளிகள் இவரைப் போல் வருவார்கள், பொது வெளிக்கு வருவார்கள்….

முன்னாள் போராளி 17.02.2025 தாயகத்தில் நடத்திய உண்ணாவிரதமும் அதன் பின்னால் பின்னப்பட்டுள்ள உள்நாட்டு சதி வலைகளும், அதனுடன் இணைந்த புலம்பெயர் மன நோயாளிகளின் வேலைகள் மிகவும் வருந்தத்தக்க வகையில், தியாகத்தை கொச்சைப் படுத்தும் வகையில் நடந்தது. . கடந்த மூன்று நாட்களாக முன்னாள் போராளி அழகரெத்தினம் வர்ணகுலராஜா,  முள்ளிவாய்க்கால் முற்றத்தில்  பத்து கோரிக்கைகளை வைத்து சாகும் வரை நீர்ராகாரமின்றி உண்ணாவிரதம் என்ற நாடகம்; உண்மையில்  மக்களின் பலத்த புறக்கணிப்பாலும், எதிர்ப்பாலும் நிறுத்தப்பட்டது. இது இவ்வாறிருக்க மக்களின் வேண்டு…

Read More

கடந்த பல தசாப்தங்களாக தமிழர்களை, இலங்கையில் ஆட்சிக்கு வரும் சிங்கள பேரினவாத அரசுகளால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

வீரத்தேவன் கனடா   காலத்தின் தேவை, கடந்த பல தசாப்தங்களாக தமிழர்களை, இலங்கையில் ஆட்சிக்கு வரும் சிங்கள பேரினவாத அரசுகளால் தொடர்ந்து தமிழர்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.   . சிங்கள பேரினவாதம் மகாவம்சமன அமைப்பில் இருந்து வெளியே வரப்போவதில்லை. அதன் வெளிப்பாடே தொடர்ந்தும் நில அபகரிப்பும், பௌத்த மயமாக்கலும் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடக்கு கிழக்கில் சைவத் தலங்களுக்கும், முஸ்லீம் பள்ளிவாசல்களுக்கும் பௌத்த தேரர்களால் இனவாதம் பேசி அச்சுறுத்தப்படுவதுடன், சமநேரத்தில் சைவத் தலங்களுக்கு முன்னால் புத்த…

Read More

இலங்கை ஜனாதிபதி அனுரவின் வல்வை விஜயத்தின் பின்னனி!

வல்வை மைந்தன் 06.02.2025 ஆண்டாண்டு காலமாக சிங்கள  ஆட்சியாளர்களும், சிங்கள பேரினவாதிகளும், இணைந்து, பூகோள அரசியலை வழிநடத்தும் மேற்குலகும் கைகோர்த்து செய்யும் வேலைகளே  எமது கைகளை வைத்தே எங்கள் கண்களை குத்தும் வேலையை சிறப்பாக செய்து வருகின்றனர். அதற்கு தேசத் துரோகிகளும் மாற்று இயக்கத்தினரும் அவர்களின் குடும்ப,  ஆதரவாளர்களும் முண்டு கொடுத்து வருவதை நாம் பார்த்து வருகின்றோம். அதன் தொடர்ச்சியாக அனுராவின் வருகைக்கு புலம்பெயர் தேசத்திலிருந்து மாற்று இயக்க ஆதரவாளர்கள் ஒரு சிலரும், விடுதலைப் புலிகளினால் நாட்டை…

Read More

தடுப்பில் இருந்தவர்களுக்கு தடுப்பு ஊசி என்ற பெயரில் விச ஊசிதான் போடப்பட்டது.

சுபன் பிரித்தானியா,   விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும். போராளியின் குரல்!!! தமிழ் தேசியத்தை அழிப்பதற்காக இந்து சமுத்திரத்தில் ஆழுமை செழுத்த துடிக்கும் நாசகார சக்திகள் பல முயற்சிகள் செய்து வருகின்றனர், இதற்காக  பல போராளிகளையும், போராளிகளின் உறவினர்களையும் நயவஞ்சகமாக…

Read More

12.01.25 சூரிச் மாநிலத்தில் சுவிஸ் ரகுபதி கோமாளிகள் சபா

வளவன் 13.01.2025 சுவிஸ் ரகுமதி கோமாளிகள் சபா!!! 12.01.25 சூரிச் மாநிலத்தில் சுவிஸ் ரகுபதி கோமாளிகள் சபாவின் தலைமையில் மிக அமைதியான முறையில் “மீண்டும் துவாரகா” என்னும் சரித்திர நாடகம் பற்றிய கலந்துரையாடலும் ஒத்திகையும் நடைபெற்றதாக தகவல்கள் கிடைத்துள்ளது. .   பொது மக்களுக்கும் அரசியல் விரும்பிகளுக்கும் இடையே நடைபெற்ற இந் நிகழ்வில் நாடகம் பற்றிய சந்தேகங்களுக்கும் , சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் எவ்வித மழுப்பல்கள் இன்றி கோமாளிகள் சபா குழுவின் நிர்வாக பொறுப்பாளர் திரு.சுவந்திரன்…

Read More

கனடா கந்தசாமி கோவில் நிர்வாகம் பகிரங்கமாக மன்னிப்பு கூறியது!

கனடா கந்தசாமி கோவில் நிர்வாகம் பகிரங்கமாக மன்னிப்பு கூறியது! கனடா கந்தசாமி கோவிலில் இலங்கை தூதுவர் துசாரா வந்த போது அவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தியதை பொதுமக்கள் பலரும் நிர்வாகத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்தனர். எமது இனத்தை அழித்த அரசாங்கத்தின் பிரதிநிதியை வரவேற்றது பிழை என உணர்ந்த கனடா கந்தசாமி கோயில் நிர்வாகம் மக்களின் கோரிக்கையை ஏற்று பொதுமக்களிடம் பொது மன்னிப்பு கூறியுள்ளது, அத்துடன் எதிர்வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் கவனத்தில் எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளது….

Read More