வினோத்
11.12.2024
இலங்கையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் பல நாடுகளிலும் பல அமைப்புகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன, அதன் தொடர்ச்சியாக, 08.12.2024 கனடாவில் அனைத்துலக தமிழர் பேரவை எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ் அமைப்பு உருவாக்கத்தில் கடந்த காலங்களில் பல விமர்சனங்களிற்கு உள்ளானவர்களும், இமாலய பிரகடனம் அஸ்தமனம் ஆவதற்கு முன்னர், அதனுடன் தொடர்புபட்டவர்கள் இவ்வமைப்புடன் தற்போது இணைந்து இருந்தாலும், இவர்கள் நல்லெண்ணத்தில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு தமிழ் மக்களிற்கு முடிந்தவரை நல்லதை செய்யும் என்ற எதிர்பார்ப்புடன் எங்களிற்கு அவர்கள் அனுப்பிய செய்தியை பதிவிடுகின்றோம். அதே சமயம் பல்வேறு நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ள புதிய, பழைய அமைப்புகளையும் நாங்கள் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கின்றோம் இவ் அமைப்புகளில் ஏதாவது அமைப்பு வழிதவறுமானால் அவர்களை மக்கள் முன் அடையாளப்படுத்துவது முதலாவது நாங்களாகத்தான் இருக்கும்.