CTC இன் செயல்பாடுகளை கண்டித்து கனடிய தமிழர் கூட்டின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு

கனடிய தமிழர் கூட்டு
08.05.2024

பல நாடுகளிலும் CTC, GTF க்கு எதிரான போராட்ட்ங்கள் மக்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கனடாவில் CTC அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட முள்ளி வாய்க்கால் நிகழ்வு மக்களின் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டது.

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை ஏற்காத CTC அமைப்பு  புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு இலங்கையில் நடந்தது இனப்படு கொலைதான் என ஏற்றுக்கொள்ளும் வரை CTC ன் செயல்பாடுகளுக்கு எதிராக   கனடிய தமிழர் கூட்டு இயங்கும் என தெரிவித்துள்ளது.

கடந்த 6ம் திகதி CTC இன் செயல்பாடுகளை கண்டித்து கனடிய தமிழர் கூட்டின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பில் அரச பிரமுகர்கள், அமைப்புக்கள், தேசிய செயல்பாட்டாளர்கள், ஊடகங்கள் உன பலரும் கலந்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *