*சாவிலும் அரசியல் செய்வோம்*

கருங்குருவி(லண்டன்)

09.03.2024
 *சாவிலும் அரசியல் செய்வோம்*
செய்யாத குற்றத்திற்காக இந்திய அரசின் சூழ்ச்சியால் 32 வருடங்கள் சிறை வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட தியாகி சாந்தன் அண்ணாவை இலங்கை இந்தியாவுடன் சேர்ந்து இயங்கும் லண்டனில் வசிக்கும் துரோகி பாலா வாத்தியும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை என்ற பெயரில் இயங்கும் சிறு குழுவினரில் சிலரும் சேர்ந்து தியாகி சாந்தன் அண்ணாவை  போராளியாக வெளியுலகிற்கு காட்டி இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியை கொலை செய்ததில் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு தொடர்பு உள்ளது என காட்ட முயற்சி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்திய அரசினால் சோடிக்கப்பட்ட சாந்தன் அண்ணாவுக்கு எதிரான குற்றச்சாட்டில் இருந்து இந்திய அரசை பாதுகாப்பதோடு இலங்கை அரசுடன் சேர்ந்து உலகநாடுகளிற்கு விடுதலைப் புலிகளை பயங்கரவாதியாக காட்டுவதே நோக்கமாகும்.
குருந்தூர் மலையில் சிவராத்திரி பூயை செய்வதற்கே அனுமதிக்காத சிங்கள பௌத்த இனவாத அரசு வழிபாட்டிற்கு போன பலரை கைது செய்ததோடு, பக்கத்தர்களிற்கு வழங்குவதற்காக சென்ற தண்ணீர் வண்டி செல்வதற்கே அனுமதி வழங்காதிருக்கும்போது, தியாகி சாந்தன் அண்ணாவின் ஊர்வலத்தின் போது காவல்த்துறையின் ஒற்றைத் தலையின் தலையீடுகூட இல்லாமல் அனுமதி வழங்கப்பட்டது பற்றி பாலா வாத்தி ஊடகத்தில் வந்து விளக்கம் கொடுப்பாரா?
 யார் இந்த பாலா வாத்தி? 2009 இற்கு முன்னர் தமிழீழ வைப்பகத்தில் ஊதியம் வாங்கி வேலை செய்த நபர், 2009 ஆயுத மௌனிப்பிற்கு பின்னர் பல காட்டிக்கொடுப்புகளை செய்தவர், இவரும் தற்சமயம் இந்தியா உளவுத்துறைக்கு செருப்பாக இந்தியாவில் இருக்கும் திரு வாத்தியும் சேர்ந்து பொது இடங்களிலும் பொராளிகள் மத்தியிலும் தேசியத்தலைவர் தாங்கள் கூறியபடி கேட்டிருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் என தேசியத்தலைவரை விமர்சித்து வந்தவர்கள். இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொராளிகளின் கைகள் தற்போதைய சூழலில் கட்டப்பட்டுள்ளதால் இவர்கள் அதனை சாதகமாக்கி தமது நாசகார நகர்வை செய்து வருகிறார்.
இன்றைக்கு அரசியல ஆலோசகர் , பொருளாதார ஆய்வாளர் என ஒரு முகமூடியை பொட்டுக் கொண்டு பொது வெளியிலும், மற்றும் புலம் பெயர் தேசத்தில் இயங்கும் அமைப்புக்கள அனைத்திலும் ஊடுருவியுள்ளார். இவர் தனது கட்டுப்பாட்டிற்குள் ஒரு சிலரை கனடா, அவுஸ்ரேலியா, லண்டன் ஆகிய நாடுகளிற்குள் தாயகத்தில் போராட்டம் என்ற பெயரில் நிதி சேகரிப்பில் ஈடுபடுவதோடு, இலங்கை அரசாங்கத்தின் ஊதுகுழல் ஊடகமான IBC இல் பொய்யான தகவல்களை பேட்டி கொடுப்பதோடு அமைப்புக்களை உடைப்பதற்கான செய்திகளையும் பதிவு செய்து வருகின்றார்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் தேசியத்தலைவரால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளுக்குள் இருந்தபடியே எமது போராட்டத்தைச் சிதைக்கும் இன்னுமொரு குறிப்பிடத்தக்க நபரை அடையாளம் காட்டுகிறோம்.
நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC)பிரதானியாக பொறுப்பாளர்

ஆபிரகாம் லிங்கன் விஜயராஜ் என்பவரே அவராவார். குறித்த நபர் சிறிலங்காவின் அரச பிரதானியாக வரவேற்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் தற்பொழுது பகிரப்பட்டு வருகின்றது. இவர்களைப் போன்று இயங்கும் ஏனைய செயற்பாட்டாளர்களின் விபரங்களையும், விடுதலைப் புலிகளின் முதலீடுகளை தம்வசப்படுத்தி வைத்திருப்பவர்கள் மற்றும்  இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பு வைத்திருப்பவர்களின் விபரங்களும் வெகு விரைவில் பொதுவெளியில் அம்பலப்படுத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *